Chief Seattle

செங்குலபதி சியாட்டில் 

(1786-1866) 

எங்கள் நிலத்தை தாங்கள் வாங்க விரும்புவதாக வாசிங்டனிலிருந்து பெருந்தலைமகன் சேதி அனுப்பியிருக்கிறார்… வானத்தையும், நிலத்தின் நேயத்தையும் எப்படி உங்களால் வாங்கவோ, விற்கவோ முடியும்? எங்களுக்கு இது ஒரு விசித்திரமான எண்ணமாகவே தென்படுகிறது. காற்றின் தூய்மையும், நீரின் பளபளப்பும் எங்கள் சொத்துகள் ஆகா என்றால்அவற்றை எப்படி உங்களால் வாங்க முடியும்

எனது மக்களைப் பொறுத்தவரை இந்த மண்ணின் ஒவ்வொரு கூறும் புனிதமானது. சவுக்கு மரத்தில் ஒளிரும் ஊசியிலை ஒவ்வொன்றும், மணலோரம் ஒவ்வொன்றும், இருண்ட தோப்புகளைச் சூழும் புகார் ஒவ்வொன்றும், வெட்டைவெளி ஒவ்வொன்றும், இரைந்து திரியும் பூச்சி-புழு ஒவ்வொன்றும் எனது மக்களின் உள்ளத்திலும் பட்டறிவிலும் ஒரு புனிதச் சின்னமாய் பதிந்துள்ளது. மரங்களில் உள்ளூரப் பாயும் சாறுகூட செங்குடி மக்களின் நினைவை ஏந்திச்செல்கிறது.

எம்மவர்கள் இறந்தாலும்இந்த அழகிய நிலத்தை மறக்கப் போவதில்லைஏனெனில்இது செங்குடிமக்களின் தாய்நிலம்நாங்கள் இந்த நிலத்தின் அங்கம்இந்த நிலம் எங்கள் அங்கம்நறுமண மலர்கள் எங்கள் சகோதரிகள்மானும்குதிரையும்மாபெரும் கழுகும் எங்கள் சகோதரர்கள்பாறைச் சிகரங்கள்பசும்புல்வெளிகள், வெதுவெதுக்கும் மட்டக்குதிரைமனிதர் – எல்லாத் தரப்புகளும் ஒரே குடும்பத்தின் அங்கங்கள்எனவேஎங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக வாசிங்டனிலிருந்து பெருந்தலைமகன் சேதி அனுப்பும்பொழுதுஅவர் எங்களிடம் நிறையவே கேட்கின்றார்.

இது எங்கள் புனித நிலம்.  ஆறுகளிலும்ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்லஇது எங்கள் மூதாதையரின் குருதிநாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்றால்இது புனிதமான நிலம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்இது புனிதமான நிலம் என்பதையும்ஏரிகளின் தெளிந்த நீரில் புலப்படும் சாயை ஒவ்வொன்றும் எங்கள் மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளையும்நினைவுகளையும் இயம்புவன என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும்.

இந்த நீரின் சலசலப்பில் எனது பாட்டனாரின் குரலை நான் செவிமடுக்கின்றேன்இந்த ஆறுகள் எங்கள் சகோதரர்கள்எங்கள் விடாயை அவை தீர்ப்பவைஎங்கள் படகுகளை ஏந்திச் செல்பவை, எங்கள் பிள்ளைகள ஊட்டி வளர்ப்பவைநாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால்இந்த ஆறுகள் எங்கள் சகோதரர்கள் – உங்கள் சகோதரர்கள் - என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்அதனை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும்ஒரு சகோதரனுக்கு நீங்கள் காட்டும் அதே கனிவைஇந்த ஆறுகளுக்கும் நீங்கள் காட்ட வேண்டும்.

காலையில் எழும் கதிரவனைக் கண்டு மூடுபனி மலைகளைவிட்டு ஓடுவது போலமுன்னேறிவரும் வெள்ளையரைக் கண்டு செங்குடிமக்கள் என்றுமே பின்வாங்கி வந்திருக்கிறார்கள்எங்கள் தந்தையரின் சாம்பலையும், இடுகாடுகளையும் நாங்கள் விட்டுச்செல்கின்றோம். எங்கள் குன்றுகளையும், மரங்களையும், நிலபுலங்களையும் நாங்கள் விட்டுச்செல்கின்றோம். எங்கள் புனிதச் சின்னங்களை நாங்கள் விட்டுச் செல்கின்றோம்.   

எங்கள் போக்கு வெள்ளையருக்குப் புரியாது என்பது எங்களுக்குத் தெரியும்எங்களுக்கு முன்பின் தெரியாத வெள்ளையர்இரவில் இந்த நிலத்துக்கு வந்துதங்களுக்கு வேண்டியதை எடுத்துச்செல்வர்ஆதலால் அவர்களுக்கு ஒரு நிலபுலமும்அடுத்த நிலபுலமும் ஒன்றேநிலம் அவர்களுக்கு சகோதரன் அல்லநிலம் அவர்களுக்கு எதிரிஅதனைக் கைப்பற்றிய பிறகு அவர்கள் அப்பால் நகர்கின்றனர்தமது தந்தையரின் இடுகாடுகளைப் பொருட்படுத்தாதுகைவிட்டுச் செல்கின்றனர்தமது தந்தையரின் இடுகாடுகாடுகளையும்தமது பிள்ளைகளின் பிறப்புரிமையையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர்தமது தாய்நிலத்தையும்சகோதர வானத்தையும் ஆடுகளைப்போல் அல்லது ஒளிரும் மணிகளைப்போல் வாங்கியோகொள்ளையடித்தோவிற்கும் பண்டங்களாகவே அவர்கள் கருதுகின்றனர்அவர்களின் பசிநிலத்தை விழுங்கிவெறும் பாலைவனத்தையே ஈயும். எங்கள் போக்குஉங்கள் போக்கிலிருந்து வேறுபட்டது. அது மட்டுமே எனக்குத் தெரிகிறது. 

உங்கள் நகரங்களைக் காண்பதே எங்கள் கண்களைப் புண்படுத்துகின்றதுசெங்குடிமக்கள் வெறும் காட்டுமிராண்டிகள் என்பதால்அவர்களுக்கு எதுவும் புரியாது என்பதால்அப்படி நேர்கின்றது போலும்வெள்ளையரின் நகரங்களில் அமைதிக்கு இடமில்லைவசந்தகாலத்தில் இலைகள் விரிவதையோபுழுபூச்சிகளின் சிறகுகள் சரசரப்பதையோ செவிமடுப்பதற்கு அங்கு இடமில்லைநான் ஒரு காட்டுமிராண்டி என்பதால்எனக்கு எதுவும் புரியாது என்பதால் அப்படி நேர்கின்றது போலும்உங்கள் நகரத்து இரைச்சல் எங்கள் காதுகளை இகழ்வது போலவே கேட்கிறதுஅல்லிப்புள்ளின் ஒற்றைக் கூவலையோஅல்லிப்பொழுதில் ஒரு தடாகத்தைச் சூழும் தவளைகள் புரியும் வாதங்களையோ ஒருவரால் செவிமடுக்க முடியவில்லை என்றால்அவர் வாழ்வில் என்னதான் உண்டுநான் ஒரு செங்குடிமகன்எனக்குப் புரியவில்லை.

தடாகத்தை  வருடி வீசும் காற்றின் மெல்லொலியையும்நண்பகலில் விழும் மழையில் குளித்து வீசும் காற்றின் மணத்தையும்அல்லது சவுக்குமரவாசம் கமழ்ந்து வீசும் காற்றின் மணத்தையுமே செங்குடிமக்கள் நயக்கின்றனர்செங்குடிமக்களைப் பொறுத்தவரை காற்று விலைமதிப்பற்றதுஏனெனில் மரமும்விலங்கும்மனிதரும் – எல்லாத் தரப்புகளும் ஒரே காற்றையே பகிர்கின்றனவெள்ளையரோ தாங்கள் சுவாசிக்கும் காற்றைக் கவனிப்பதாகத் தெரியவில்லைஎவ்வாறு இறந்து நாட்பட்டு மரத்த ஒருவனுக்கு எதுவுமே மணக்காதோஅவ்வாறே  வெள்ளையருக்கு எதுவுமே மணக்காது

எனினும் நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால்எங்கள் காற்று விலைமதிப்பற்றது என்பதையும்தான் துணைநிற்கும் உயிரினங்கள் அனைத்துடனும் தன் உணர்வை அது பகிர்கின்றது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்எங்கள் பாட்டனாரின் முதல்மூச்சை அவருக்கு ஈந்த அதே காற்றே அவருடைய இறுதிப் பெருமூச்சையும் ஏந்திச் சென்றதுஎங்கள் பிள்ளைகளுக்கு வாழும் உணர்வை வழங்க வேண்டியது காற்றேநாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால்நீங்கள் அதனைப் புனித நிலமாக ஒதுக்கிவைக்க வேண்டும்வெள்ளையரே சென்று பசும்புல்வெளி மலர்களின் இனிமை கமழும் காற்றைத் துய்க்கும் இடமாக அதனை நீங்கள் ஒதுக்கிவைக்க வேண்டும்.

எனவேஎங்கள் நிலத்தை வாங்கும் உங்கள் எண்ணத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம்உங்கள் எண்ணத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டால்நான் ஒரு நிபந்தனை விதிப்பேன்வெள்ளையர் இந்த நிலத்து விலங்குகளை தமது சகோதரர்களாக நடத்த வேண்டும்நான் ஒரு காட்டுமிராண்டிஎனக்கு வேறு வழி எதுவும் புரியவில்லை.

விரையும் தொடருந்திலிருந்து வெள்ளையரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஓராயிரம் எருமைகள் எங்கள் புல்வெளிப்புலத்தில் கிடந்து அழுகுவதை நான் பார்த்திருக்கின்றேன். நான் ஒரு காட்டுமிராண்டிநாங்கள் உயிர்வாழ்வதற்காக மட்டுமே கொன்றுஉண்ணும் எருமையைவிடபுகை கக்கும் அந்த இரும்புக் குதிரை எப்படி முக்கியமானதாய் இருக்கமுடியும் என்பது எனக்குப் புரியவில்லைவிலங்குகள் இல்லையேல்வெள்ளையர் என்னாவதுஎல்லா விலங்குகளும் அழிந்தொழிந்தால்மாபெரும் தனிமையுணர்வினால் மானிடர் மாண்டுபோவர் அன்றோவிலங்குகளுக்கு எது நேர்கிறதோஅதுவே விரைவில் மனிதருக்கும் நேரும்எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை

உங்கள் பிள்ளைகள் மிதிக்கும் நிலம் எங்கள் பாட்டன்மாரின் சாம்பலே என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும்இந்த நிலத்தை அவர்கள் மதிக்கும் வண்ணம்இது எங்கள் மக்களின் வாழ்வினால் நிறைந்த நிலம் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்நிலம் எங்கள் தாய் என்று எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் புகட்டியதைஉங்கள் பிள்ளைகளுக்கும் நீங்கள் புகட்டுங்கள்நிலத்துக்கு நேர்வதே நிலத்தின் புதல்வருக்கும் நேரும்நிலத்தில் உமிழும் மனிதர் தம்மீது உமிழும் மனிதரே.

நிலம் மனிதருக்குச் சொந்தமல்லமனிதரே நிலத்துக்குச் சொந்தம்ஒரே குருதியால் இணைக்கப்பட்ட குடும்பத்தைப் போலஎல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைநிலத்துக்கு நேர்வதே நிலத்தின் புதல்வருக்கும் நேரும்வாழ்க்கை-வலையை மனிதர் பின்னவில்லைஅந்த வலையில் மனிதர் ஓர் இழை மட்டுமேஅந்த வலைக்கு அவர்கள் என்ன செய்கிறார்களோஅதையே அவர்கள் தமக்குச் செய்கிறார்கள்எனினும்எனது மக்களுக்கு நீங்கள் ஒதுக்கிய புலத்துக்கு நாங்கள் செல்லலாம் என்று நீங்கள் முன்வைத்த எண்ணத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம்நாங்கள் புறம்பாகவும்அமைதியாகவும் வாழ்வோம்எங்கள் எஞ்சிய நாட்களை நாங்கள் எங்கு கழிப்போம் என்பது அத்துணை முக்கியமில்லை.

தங்கள் தந்தையர் தோற்கடிக்கப்பட்டுஅடிபணிய வைக்கப்பட்டுள்ளதை எங்கள் பிள்ளைகள் கண்டுள்ளார்கள்எங்கள் போராளிகள் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றார்கள்தோல்வியை அடுத்து சோம்பித் திரிந்து, சுவைக்க உணவுண்டுவெறிக்க மதுவுண்டுஉடலைக் கெடுத்துபொழுதைக் கழித்து வருகின்றார்கள்.

எங்கள் எஞ்சிய நாட்களை நாங்கள் எங்கு கழிப்போம் என்பது அத்துணை முக்கியமில்லைஅது பல நாட்களுக்குமல்லஇன்னும் ஒருசில நாழிகளேஇன்னும் ஒருசில மாரிகளேமுன்னொரு காலத்தில் உங்களைப் போலவே வலிமையுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்த ஒரு மக்கள்-திரளின் இடுகாடுகளை நினைந்துருகுவதற்குஅன்று இந்த நிலத்தில் வாழ்ந்த அல்லது இன்று இந்தக் காடுகளில் சிறு குழுமங்களாகத் திரியும் மகத்தான குலத்தவரின் பிள்ளைகளுள் எவருமே எஞ்சப்போவதில்லைஎனினும்எனது குலத்தவர் மறைவதை நான் ஏன் நினைந்துருக வேண்டும்குலங்கள் மனிதரால் ஆனவைஅவ்வளவுதான்கடலின் அலைகளைப் போல மனிதர்கள் வருவார்கள்போவார்கள்.

நண்பருடன் நண்பர் கதைப்பது போல்வெள்ளையரின் கடவுள் வெள்ளையருடன் உலவிஉரையாடுவதுண்டுஅத்தகைய வெள்ளையர் கூட பொது விதிக்கு விலக்கானோர் அல்லர்எவ்வாறாயினும்நாங்கள் எல்லோரும் சகோதரர்கள் ஆகலாம்பொறுத்திருந்து பார்ப்போம்எங்கள் கடவுளும் அதே கடவுளேஅதனை வெள்ளையர் ஒருநாள் கண்டுபிடிக்கக் கூடும்எங்கள் நிலத்தை நீங்கள் சொந்தமாக்க விரும்புவது போல்கடவுள் உங்களுக்கே சொந்தம் என்று நீங்கள் நினைக்கக் கூடும்ஆனால் கடவுளை உங்கள் சொத்தாக்க முடியாதுஅவர் மனிதரின் கடவுள்அவர் செங்குடியினருக்கும் வெள்ளையருக்கும் சரிநிகராகவே கருணை காட்டுபவர்அவரைப் பொறுத்தவரையும் இது விலைமதிப்பற்ற நிலமேஅத்தகைய நிலத்துக்கு தீங்கு விளைவிப்பதுஅதனைப் படைத்தவரை அவமதிப்பதற்கு நிகர்இனிவெள்ளையர் கூட மறையவே வேண்டும் - ஒருவேளை மற்றைய குலத்தவர் அனைவரையும்விட வேகமாக மறையவே வேண்டும்எனினும்நீங்கள் மாளும் வேளையில் ஒளிவீசுவீர்கள் - உங்களை இந்த நிலத்துக்கு கொண்டுவந்துஏதோவொரு விசேட நோக்கத்துக்காகஇந்த நிலத்தையும்மக்களையும் உங்கள் ஆட்சிக்கு அடிப்படுத்திய கடவுளின் வலிமையால்நீங்கள் மாளும் வேளையில் ஒளிவீசுவீர்கள்அந்த விதி எங்களுக்கு ஒரு புதிராகவே தென்படுகிறது.

எருமைகள் எல்லாம் எப்பொழுது கொன்றொழிக்கப்படும்காட்டுக் குதிரைகள் எல்லாம் எப்பொழுது வீட்டுக் குதிரைகளாக்கப்படும்மானுட மணம் கமழும் காட்டின் மூலைமுடக்குகளும்முற்றிய குன்றுகளின் கண்கவர் தோற்றமும் தந்திக் கம்பிகளால் எப்பொழுது கறைப்படுத்தப்படும் என்பது எங்களுக்குப் புரியவில்லைபுதர் எங்கேஒழிந்து போயிற்றுகழுகு எங்கேஒழிந்து போயிற்றுவேட்டைக்கும்வேகம்கொண்ட மட்டக்குதிரைக்கும் விடைகொடுப்பது என்பது என்னஅதுவே வாழ்வின் முடிவுஅதுவே பிழைப்பின் தொடக்கம்

எனவேஎங்கள் நிலத்தை வாங்கும் உங்கள் எண்ணத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம்அதற்கு நாங்கள் உடன்படுவோம் என்றால்நீங்கள் உறுதியளித்த ஒதுக்குப்புலத்தை ஈட்டிக்கொள்வதற்காகவே உடன்படுவோம்ஒருவேளைஅந்த ஒதுக்குப்புலத்தில் எங்கள் குறுகிய வாழ்நாளை நாங்கள் விரும்பியவாறு கழிக்கலாம்பிறந்த குழந்தை அதன் தாயின் இதயத்துடிப்பை நேசிப்பது போலஇந்த நிலத்தை நாங்கள் நேசிக்கின்றோம்.

ஆதலால்இந்த நிலத்திலிருந்து இறுதிச் செங்குடிமகன் மறைந்த பின்னரும்எங்களைப் பற்றிய நினைவு என்பது எங்கள் புல்வெளிப்புலத்தைக் கடந்துசெல்லும் ஒரு முகிலின் நிழலாய் மாறிய பின்னரும்இந்தக் காடுகளும் நீர்நிலையோரங்களும் எனது மக்களின் ஆவிகளைப் பேணிக் காக்கும்எனவே எங்கள் நிலத்தை நாங்கள் உங்களுக்கு விற்போம்நாங்கள் நேசித்தவாறு அதனை நேசியுங்கள்நாங்கள் பராமரித்தவாறு அதனைப் பராமரியுங்கள்இந்த நிலத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளும்பொழுதுஅது எப்படி இருக்கிறதோ,  அப்படியே அதனைப் பற்றிய நினைவை உங்கள் உள்ளத்துள் பேணி வைத்திருங்கள்எங்கள் அனைவரையும் கடவுள் நேசிப்பதுபோலஉங்கள் பிள்ளைகளுக்காகஇந்த நிலத்தை இதயபூர்வமாக நேசித்துப் பேணுங்கள்.

எங்கள் கடவுளும் அதே கடவுளேஅவரைப் பொறுத்தவரையும் இது விலமதிப்பற்ற நிலமேவெள்ளையரும் பொது விதிக்கு விலக்காக முடியாதுஎவ்வாறாயினும்நாங்கள் அனைவரும் சகோதரர்களாக விளங்கலாம்பொறுத்திருந்து பார்ப்போம்.

   _______________________________________________________

 Seattle, 1852, translated by Mani Velupillai, 2009-08-20.

http://www.venerabilisopus.org/en/video/chief-seattle-s-reply-1852

No comments:

Post a Comment