Image result for rosa luxemburg quotes    

 ரோசா லக்சம்பேர்க்

 ஒரு துவக்குச் சோங்கினால் அவருடைய தலை தகர்க்கப்படுகிறதுகுற்றுயிருடன் அவர் ஓர் ஊர்தியில் ஏற்றப்படுகிறார்அந்த ஊர்திக்குள் வைத்து அவர் சுடப்படுகிறார்அவருடைய உடல் ஒரு கால்வாயில் வீசப்படுகிறது. "கிழட்டுப் பரத்தை கிடந்து நீந்துகிறாள்என்கிறான் கொலையாளிகளுள் ஒருவன்மூன்று மாதங்களாக அது அப்படியே கிடக்கிறதுஅப்பொழுது ரோசாவுக்கு 48 வயதுஇது அவரது நடுகல்லுரை:

     சிவப்பு ரோசாவும் இனி இல்லையே
     அவர் புதையுண்ட இடமும் புலப்படவில்லையே
     வாழ்வின் பொருளை அவர் வறியோர்க்கு ஈந்தாரே
     பொருள்படைத்தோர் அவரைத் துடைத்தெறிந்தனரே.     
   
     1919 ஜனவரி 15ம் திகதி ஜேர்மன் படையாட்களால் கொல்லப்பட்ட ரோசா லக்சம்பேர்க் 1871 மார்ச் 5ம் திகதி போலாந்தில்ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர்தனது 16 வயது முதல் 3 தசாப்தங்களுக்கு மேலாக அவர் சமூகவுடைமை நாடிப் போராடியவர்சமூகவுடைமை ஊடாகவே நீதிஅமைதிசமத்துவம் அடையமுடியும் என்று திடமாக நம்பியவர்அவரைப் பொறுத்தவரை மானுடத்தின் இறுதித் தெரிவுகள் இரண்டே இரண்டு: (1) சமூகவுடைமை, (2) காட்டுமிராண்டித்தனம்அதே சமூகவுடைமைக்காகப் போராடிய ரோசாஅதே காட்டுமிராண்டித்தனத்துக்கே பலியானார்!
     "…அவர் ஒரு சிறிய பெண்மணிநலிந்த மேனிவருத்தக்காரி போன்ற தோற்றம்வீறார்ந்த முகம்அறிவொளி வீசும் அழகிய விழிகள்தன் உளவலிகுணநலம் கொண்டு மற்றவர்களை ஈர்ப்பவர்பலவித குணவியல்பு படைத்தவர்அவரது நுண்ணிய சிறப்புகள் அவருக்கு மெருகூட்டுபவைபுரட்சி வேட்கைமானுடம்கலைஇயற்கைபுள்ளினம்மரஞ்செடிகொடிகள் அனைத்தும் அவரது அகவீணை நரம்புகளை மீட்டவல்லவை…" (Leon Trotsky, My Life).
          சுவிற்சலாந்தில் ரோசாவைச் சந்தித்த யோன் மில் என்னும் யூத சமூகவுடைமைவாதிஅவரை இப்படி விபரித்தார்"… அவர் குறுகிய உடலும்பாரிய தலையும்  கொண்டவர்நொண்டியும்தாண்டியும் நடப்பவர்முதன்முதல் அவரை நான் கண்டபொழுது என் உள்ளத்தில் நல்ல தாக்கம் ஏற்படவில்லைஆனால் அவருடன் கொஞ்ச நேரம் கழித்த பின்னர்அவருடைய ஆற்றலும்கூர்மதியும்உயிர்த்துடிப்பும்கெட்டித்தனமும் புலப்பட்டன…"     
     ரசியப் பேரரசை அவர் மூன்று நிலைகளில் எதிர்கொண்டார்: (1) ரசியப் பேரரசரின் கொடுங்கோன்மைக்கு உள்ளாகிய ரசிய மக்களுக்காகவும், (2) ரசியப் பேரரசினால் அடக்கியாளப்பட்ட போலாந்து மக்களுக்காகவும், (3) ரசியப் பேரரசினால் அடக்கியொடுக்கப்பட்ட யூத மக்களுக்காகவும் அவர் போராடினார்அடக்கி ஒடுக்கப்படும் தரப்புகள் அனைத்துக்காகவும் அவர் குரல் கொடுத்தார்ஒரு தரப்புக்கு விழும் அடியை ஏனைய தரப்புகளுக்கு விழும் அடியாகவே அவர் எடுத்துக்கொண்டார்.
     தனக்குரிய பாதையையும்அதற்கான வெளிச்சத்தையும் அவர் மார்க்சியத்தில் கண்டுகொண்டார்"…ஒவ்வொருவரும் முற்றுமுழுதாகசுதந்திரமாக மேம்படுவதற்கு ஏதுவான ஆட்சிநெறி கொண்ட சமூகத்தை அமைப்பதே சமூகவுடைமையின் நோக்கம்…"  என்ற மார்க்சின் கூற்று அவரைப் பெரிதும் ஆட்கொண்டதுதொழிலாள இயக்கத்தின் வெற்றியூடாகவே பெண்களும்சிறுபான்மையோரும் விடுதலை பெறமுடியும் என்று அவர் திடமாக நம்பினார்"…மக்களே தமது வேலைத்தலங்களையும்சமூகங்களையும்அரசாங்கங்களையும் பொறுப்பேற்க வேண்டும்அனைவருக்கும் பேச்சுச் சுதந்திரம் அளிக்க வேண்டும்அனைவரும் ஆட்சி புரிவதில் பங்குபற்ற வேண்டும்…"  என்று அவர் முழங்கினார்.
     ரோசா லக்சம்பேர்க்கின் உலகளாவிய கண்ணோட்டத்துக்கும்பரந்துவிரிந்த இதயத்துக்கும்அவர் ஒரு தோழிக்கு எழுதிய மடல் சான்று பகர்கிறது"…இந்த யூத மக்களின் வேதனை விசயத்தில் மட்டும் உனக்கு என்ன வேண்டிக் கிடக்கிறதுஇறப்பர்த் தோட்டங்களில் வருந்தும் அப்பாவிகளும்ஆபிரிக்காவில் ஐரோப்பியருக்கு அடிமைப்பட்டு உழலும் கருப்பின மக்களும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களே… யூத சமூகத்துக்காக மட்டும் நான் பரிந்துரைப்பவள் அல்லஉலகில் எங்கெல்லாம் முகில்களும்பறவைகளும்மக்களின் கண்ணீரும் தென்படுகின்றனவோ அங்கெல்லாம் என் நெஞ்சம் நடமாடுகிறது… "  
     போலாந்தில் கூலி உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்த ரோசாவின் தோழர்கள் சிலர் கொல்லப்பட்டதை அடுத்துஅவர் ஒரு கத்தோலிக்க அடிகளிடம் சென்றுதான் ஒரு கத்தோலிக்க இளைஞனைக் காதலிப்பதாகவும்தாங்கள் இருவரும் மணம் புரிய விரும்புவதாகவும்தான் ஒரு யூதப் பெண் என்றபடியால்ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தீக்கை பெறவேண்டி உள்ளதாகவும்தான் மதம் மாறுவதற்கும்தன் காதலனைக் கைப்பிடிப்பதற்கும் தனது பெற்றோர் குறுக்கே நிற்பதாகவும்ஆதலால் சுவிற்சலாந்துக்குத் தப்பியோடிஅங்கு தீக்கை பெறவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
     ரோசாவின் கதையை நம்பிய கத்தோலிக்க அடிகள்அவரை ஓர் உழவனின் வண்டியில் சுவிற்சலாந்துக்கு கடத்த ஒழுங்கு செய்தார்ஒரு வைக்கோல் கட்டின் அடியில் புதையுண்டுநெடுந்தூரம் குலுக்குண்டுமூர்ச்சித்துப் பயணித்த ரோசாசுவிற்சலாந்தில் வெளிப்பட்டுஅரசியல் அகதியாகத் தன் போராட்ட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
     தன் வாழ்நாள் முழுவதும் உயிரினங்களாலும்மரஞ்செடிகொடிகளாலும் ஈர்க்கப்பட்ட ரோசா தனது பல்கலைக்கழகப் பாடங்களாக உயிரியலையும்கணிதவியலையும் தேர்ந்தெடுத்தார்அத்துடன் சட்டவியல்மெய்யியல்பொருளியல் பாடங்களையும் அவர் கற்றறிந்தார்வெளியுலகத் தொடர்பின்றிச் சிறையிருந்த வேளைகளில் பூச்சிபுழுக்கள்மரஞ்செடிகொடிகள் பற்றி ஆராய்வதில் மெய்மறந்தார்சிறையிலிருந்து அவர் எழுதிய மடல் ஒன்று"…ஜேர்மனியில் இசைப்புள் மறைந்த காரணங்களை நேற்று நான் வாசித்தறிந்தேன்அறிவியலின் பாற்பட்ட காட்டியல்தோட்டச்செய்கைபயிர்ச்செய்கையால் அவற்றின் கூடுகளும்உணவு வகைகளும் ஒழிந்துவிட்டனநவீன முறைகளால் வெளிகளும்பொந்துமரங்களும்சுள்ளிகளும்இலைதழைகளும் அருகி வருகின்றனஇதை நினைந்துஉள்ளம் வெந்து புண்ணாகிறது…"  
     ரசிய ஆளுகைக்கு உட்பட்ட போலாந்திலிருந்து சுவிற்சலாந்துக்குத் தப்பியோடிய அகதிகளுள் லியோ யோகிச்சஸ் என்ற யூதரும் ஒருவர்சமூகவுடைமைவாதத் தலைவர்களுள் ஒருவராகிய லியோபோலாந்தில் இரு தடவைகள் சிறையிருந்தவர்மீண்டும் பிடிபடுந் தறுவாயில் சுவிற்சலாந்துக்குத் தப்பியோடியவர்இரகசிய செய்தித்தாள் அச்சடித்தல்கள்ளக் கடவுச்சீட்டு தயாரித்தல்தடைசெய்யப்பட்ட நூல்களைத் தருவித்தல் ஆகியவற்றில் துறைபோனவர்லியோவின் துணிவும்திறனும்மதியும்நிதானமும்உறுதியும் ரோசாவை ஆட்கொண்டனரோசாவின் கூரிய மதியும்தீவிர நெஞ்சமும் லியோவைக் கவர்ந்தனதவிர்க்கவியலாவாறு அவர்களிடையே காதலும்தோழமையும் ஓங்கின.
     1893ல் ரோசாவும்லியோவும் (போலாந்து மொழியில்தொழிலாளர் குறிக்கோள் என்னும் செய்தித்தாளை வெளியிடத் தொடங்கினார்கள்முதலாளித்துவத்துக்கும்ரசியப் பேரரசுக்கும் எதிரான போராட்டத்தை அது ஆதரித்ததுஉலகத் தொழிலாளிகளின் திண்மையை அது போதித்ததுசமூகவுடைமைவாதிகளிடையே உலகளாவிய ஒற்றுமைக்கு அது அழைப்பு விடுத்ததுஅப்பொழுது ஜேர்மன் சமூக மக்களாட்சிக் கட்சியே உலகின் மிகப்பெரிய சமூகவுடைமைவாதக் கட்சியாக விளங்கியதுஆதலால் ஜேர்மனிக்குச் சென்றுஅந்தக் கட்சியில் சேர்ந்து போராட அவர் புறப்பட்டார்.
     ஜேர்மன் சமூக மக்களாட்சிக் கட்சியில் ரோசாவுக்கும்எட்வேட் பேண்ஸ்டைன் என்ற பழம்பெரும் உறுப்பினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்துமோதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது"… மார்க்சியம் ஒரு நாட்பட்ட சித்தாந்தம்… புரட்சி இன்றியே சமூகவுடைமையை எய்த முடியும்… நாடாளுமன்றத்தின் ஊடாகவே சீர்திருத்தங்களைப் புகுத்த முடியும்… முதலாளித்துவம் வசப்படுத்தப்பட்டுவிட்டது… இனிமேல் பொருளாதார மந்தமோ நெருக்கடியோ ஏற்படாது… முதலாளித்துவத்தைச் சீர்திருத்துவதிலேயே எமது கட்சி ஈடுபட வேண்டும்… முதலாளித்துவத்தைக் கவிழ்ப்பதில் அது ஈடுபடக் கூடாது… எமது கட்சி ஒரு தற்காலக் கட்சியாகவும்நிகழ்வரத்துக்கு உகந்த கட்சியாகவும் மாற வேண்டும்… நாடாளுமன்றத்திலும்தொழிற் சங்கங்களிலும் அது புலனைச் செலுத்த வேண்டும்புரட்சி முழக்கங்களை அது கைவிட வேண்டும்…" என்றார் பேண்ஸ்டைன்.
     அதற்கு ரோசாவின் பதிலடி"…பேண்ஸ்டைன் முன்வைத்த மாற்றுத்தெரிவுகள் பொய்யானவை… புரட்சியாசீர்திருத்தமாஎன்ற வினாவுக்கு அவர் பதிலிறுக்கவில்லை…    சீர்திருத்தமும்,   புரட்சியும் சமூகவுடைமைக்கு மாற்று வழிகள் ஆகா… எமது குறிக்கோளை எய்துவதற்கு மிகவும் அமைதியானதணிவானமெதுவான வழியை அவர் நாடவில்லை…  வேறொரு குறிக்கோளை எய்துவதற்கே அத்தகைய வழியை அவர் நாடுகிறார்… ஒரு புதிய சமூகத்தை அமைக்கும் நிலைப்பாட்டை விடுத்துபழைய சமூகத்துக்குப் புறப்பூச்சிடும் நிலைப்பாட்டையே அவர் நாடுகிறார்… தொழிலாள வர்க்கத்தின் வாழ்வை மேம்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த முடியும்பயன்படுத்த வேண்டும் என்பதில் ஐயமில்லை… ஆனால்,  முதலாளித்துவத்தைக் கவிழ்ப்பதற்கானஉடைமையாளர்களின் கைகளிலிருந்து தொழிற்சாலைகளை அகற்றுவதற்கானதனியார் துறையினர் இலாபம் ஈட்டுவதை ஒழிப்பதற்கான  சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றப் போவதில்லை… அத்தகைய சட்டங்களை காவல்துறையினரும்படையினரும் நடைமுறைப்படுத்துவார்களாஒரு முதலாளித்துவ சமூகத்தில் சட்டம் என்றென்றும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தையே நிலைநிறுத்தும் அல்லவா… முதலாளித்துவம் என்னும் அவலக் கடலினுள் சமூக சீர்திருத்தம் என்னும் எலுமிச்சம்பழக் கரைசலைச் சொட்டுச் சொட்டாக இட்டுஅதனை ஓர் இனிய சமூகவுடைமைக் கடலாக மாற்றலாம் என்று பேண்ஸ்டைன் கனவு காண்கிறார்"  என்று சாடினார் ரோசாஈற்றில் ரோசாவின் நிலைப்பாட்டையே ஜேர்மன் சமூக மக்களாட்சிக் கட்சி ஏற்றுக்கொண்டதுஅவர் தலையாய சமூகவுடைமைவாத சித்தாந்திகளுள் ஒருவராக எழுச்சி பெற்றார்.
     1904ல் ஜேர்மன் பேரரசரை அவமதித்த குற்றத்துக்காக அவர் 6 கிழமைகள் சிறையிருந்தார். 1905ல் 2 இலட்சம் ரசியத் தொழிலாளிகள் 8 மணித்தியால வேலைஅடிப்படை உத்தரவாதக் கூலிநாடாளுமன்ற அங்கத்துவம் கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்ஒரு மதகுருவின் தலைமையில் முட்டுக்காலிலிருந்து தொழுத தொழிலாளிகளைப் படையினர் சுட்டுத் தள்ளினார்கள். 500 பேர் கொல்லப்பட்டார்கள்ஆயிரக் கணக்கானோர் காயப்பட்டார்கள்.
     ரசிய சமூகவுடைமைவாதிகளைப் பின்பற்றிஜேர்மன் சமூக மக்களாட்சிக் கட்சியும் பாரிய வேலைநிறுத்தங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ரோசா வாதாடினார்ஆனால் அவர் சார்ந்த கட்சியோ அடக்கி வாசிக்கவே விரும்பியதுபொறுப்புணர்ச்சியின்றிப் புரளி கிளப்புபவர் என்று ரோசாவை அது கண்டித்ததுபழைமைவாத எதிர்க்கட்சியினரோஅவரைக் கலகம் விளைவிக்கும் அந்நியர் என்றும்ஆட்சிகவிழ்க்கும் யூதர் என்றும்உன்மத்தம் கொண்ட பெண்மணி என்றும் சாடினார்கள்போலாந்துக்குத் திரும்பிப் போகும்படி அவரை நோக்கிக் கூச்சலிட்டார்கள்ரோசா போலாந்து திரும்பினார்.    
     ஓர் ஊடகர் போல் வேடம் பூண்டுகள்ளக் கடவுச்சீட்டுடன்தாயகம் திரும்பும் வழியில்அங்கு இடம்பெற்ற வேலைநிறுத்தத்தால் அவருடைய தொடருந்துப் பயணம் தடைப்பட்டதுஅதே வேலைநிறுத்தத்தை அடக்குவதற்காகப் படையினரை ஏற்றிச்சென்ற வேறொரு தொடருந்தில் தலைமறைவாக  ஒரு பெண்மணிஅதுவும் ஒரு புரட்சிப் பெண்மணி பயணிப்பது அதே படையினருக்குத் தெரியாதுஊர் திரும்பிய ரோசா தனது குடும்பத்தவரையும்ஏற்கெனவே ஊர் திரும்பிய லியோவையும் வார்சோவில் சந்தித்தார்ஊர் திரும்பிய கையோடு போலாந்தில் இடம்பெற்ற போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக அவர் ஈடுபடுத்திக்கொண்டார்"மிகைபடுத்தாமல்முழு நேர்மையுடன் என்னால் ஓர் உண்மையை வலியுறுத்த முடியும்என் வாழ்நாளில் இதுவே மிகமகிழ்ச்சியான காலகட்டம்என்று ரோசாவின் மடல் ஒன்று கூறுகிறதுஅப்பொழுது அவர் எழுதிய வேறு சில வரிகள்"சமூகவுடைமைக்கான போராட்டமே உலக வரலாறு கண்ட மாபெரும் உள்நாட்டுப் போர்… தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும்… போராடாமல் சமூகவுடைமையை ஈட்ட முடியாது… வன்முறை ஓங்குதல் திண்ணம்குருதி சிந்துதல் திண்ணம்எனினும் ஒரு துளி குருதியும் வீணாகச் சிந்தக்கூடாது… முழு உலகத்தையும் கவிழ்க்க வேண்டும்… ஆனால் தவிர்க்கப்படக்கூடிய கண்ணீர் ஒரு குற்றச்சாட்டுக்கு நிகரானது… ஒரு முக்கிய செயலைப் புரிய விரையும் ஒருவர்நினையாப் பிரகாரமாகவேனும் ஒரு புழுவை மிதிப்பது குற்றமாகும்…"      
     1906ல் ரசியப் படைவேலைநிறுத்தத்தை ஒடுக்கிய பின்னர்காவல்துறையினர் ரோசாவையும்லியோவையும் படுக்கையில் வைத்து மடக்கிப் பிடித்தார்கள்சிறையிலிருந்து அவர் எழுதிய ஒரு மடலின்படி"அவர்கள் என்னை அலங்கோலமான நிலையில் வைத்துப் பிடித்தார்கள்… ஒரு காட்டு விலங்கினைப் போல் அடைத்து வைத்தார்கள்."
     உண்ணா நோன்பிருந்துநோய்வாய்ப்பட்டுவிடுதலையான ரோசா,  பின்லாந்து சென்றுலெனின் உட்படப் புலம்பெயர்ந்த மார்க்சியவாதிகளைச் சந்தித்தார்"லெனினுடன் கதைப்பதே இன்பம்அவர் பலதிறப்பட்டவர்பரந்த அறிவு படைத்தவர்அவருடைய கடுத்த முகம் எனக்கு மிகவும் பிடித்தமானதுஎன்று ரோசா கருத்துரைத்தார்.
     எனினும்லெனினுக்கும் ரோசாவுக்கும் இடையே தேசியப் பிரச்சனை குறித்து காரசாரமான விவாதம் ஒன்று இடம்பெற்றது: (1) பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து அயர்லாந்தும், (2) ரசிய ஆதிக்கத்திலிருந்து போலாந்தும்பின்லாந்தும், (3) சுவீடிய ஆதிக்கத்திலிருந்து நோர்வேயும், (4) பால்க்கன் பேரரசிலிருந்து சேர்பியாவும்பல்கேரியாவும் விடுதலை பெறுவதுஇந்நான்கு பேரரசுகளையும் நலிவுறுத்தும் என்றும்அதேவேளை அத்தகைய தேசங்களின் விடுதலை அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஓங்குவதற்கு வழிவகுப்பது தவிர்க்க முடியாதது என்றும்எனினும் அது மக்களாட்சிக்கும் புரட்சிக்கும் ஒரு படிக்கல் என்றும் வாதாடினார் லெனின்.
     லெனினே ஒப்புக்கொண்டவாறுஅத்தகைய விடுதலை அங்கெல்லாம்  முதலாளித்துவ வர்க்கம் ஓங்க வழிவகுக்கும் என்றபடியால்ரோசா அவற்றின் விடுதலையை வன்மையாக எதிர்த்தார்.
     லெனினோஅடக்கியொடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலை பெறுவதில் மக்களாட்சி விழுமியம் பொதிந்துள்ளது என்றும்ஆதலால் அது முதலாளித்துவத் தன்மை வாய்ந்ததாய்  விளங்கினாலும்அதனை ஆதரிக்க வேண்டும் என்றும்சேர்பியபல்கேரிய தேசங்களின் விடுதலையால் பால்க்கன் பேரரசில் நிலையூன்றிய நிலமானியக் கட்டுக்கோப்பு தகர்க்கப்படும் என்றும்அங்கு ஓரளவு விடுதலைபெற்ற உழவர்களும்காணிச் சொந்தக்காரர்களும் மேலோங்குவார்கள் என்றும்அது மக்களாட்சிக்கு ஓர் ஏணிப்படி என்றும்ஆகவே அதனை ஆதரிக்கவேண்டும் என்றும்  வாதாடினார்.
     "பிரித்தானியப் பேரரசிலிருந்து அயர்லாந்து விடுதலை பெறும்வரைபிரித்தானியத் தொழிலாளிகள் விடுதலை பெறமுடியாதுஎன்று மார்க்ஸ் இட்ட முழக்கத்துடன் லெனினுடைய நிலைப்பாடு உடன்படுவதும்ரோசாவின் நிலைப்பாடு முரண்படுவதும் கவனிக்கத்தக்கது.
     தேசங்களின் விடுதலைதேசிய முதலாளித்துவத்தின் விடுதலையாகவே அமையும்ஆகவே சமூகவுடைமைவாதிகள் தேசியக் கண்ணோட்டத்தை விடுத்துசர்வதேசியக் கண்ணோட்டத்தையே பற்றிக்கொள்ள வேண்டும் என்பது ரோசாவின் வாதம்.
     ரோசாவும்லியோவும் வெறுங் காதலர்களேயொழியவாழ்க்கைத் துணைவர்கள் அல்லர்"எங்களுக்கு ஒரு பிள்ளை தேவை என்பதை நான் அடிக்கடி உணர்ந்துகொள்கிறேன்இந்தக் குறையை என்னால் தாங்கமுடியவில்லைவீட்டில் இருப்பது இன்பமேஆனால்பிள்ளகள் இல்லாத வாழ்வுவெறுமையும் மடைமையும் நிறைந்த வாழ்வு என்பது உனக்குப் புரியவில்லைஎன்று பிரிவுத் துயரில் அவர் லியோவுக்கு எழுதியதுண்டுரோசாவுடன் குடும்பம் நடத்தும் மனநிலையில் லியோ இருக்கவில்லைஎனினும்ரோசாவை ஒரு புதிய காதலனுடன் கண்டபொழுதுலியோ பொறாமைப்பட்டுரோசாவை அச்சுறுத்தினான்ரோசா தற்பாதுகாப்புக்காக ஒரு கைத்துவக்கு வாங்கி வைத்திருந்தார்!  
     1907ல் ரோசா ஜேர்மனி திரும்பியபொழுது மக்கள் அவரை மொய்க்கவேகிளர்ச்சியை விரும்பாத அவருடைய சமூக மக்களாட்சிக் கட்சியினர் மிகவும் சங்கடப்பட்டார்கள்அதேவேளைபொறிபறக்கும் பேச்சாளரும் எழுத்தாளருமாகிய ரோசாவை அவர்களால் தட்டிக்கழிக்க முடியவில்லைஆதலால் கட்சிக் கல்லூரியில் அவரை ஒரு விரிவுரையாளராக அமர்த்தினார்கள்.
     அதே ஆண்டில்ஸ்டட்கார்ட் என்ற ஜேர்மன் நகரில் கூடிய சர்வதேய சமூகவுடைமையாளர் பேரவையில் லெனினும் ரோசாவும் சேர்ந்து போருக்கு எதிராக முன்வைத்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது"படையாண்மைக்கு (இராணுவ தர்பாருக்குஎதிரான போராட்டத்தை சமூகவுடைமை நோக்கிய வர்க்கப் போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது… முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே நிகழும் போர்கள்உலக சந்தைகளைப் பற்றிகொள்வதற்கு அவை போட்டியிடுவதன் பெறுபேறே… அதில் அந்நிய மக்களும்அந்நிய தேசங்களும் அடிமைகொள்ளப்படுகின்றன… ஆதலால் போர்கள் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பாகும்… முதலாளித்துவ பொருளாதாரம் ஒழிக்கப்பட்ட பின்னரே போர்கள் ஒழியும்… போர் மூள்வதைத் தடுப்பதற்கு இயன்றவரை பாடுபடுவதே உழைக்கும் வர்க்கத்தின்அவர்தம் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் கடமை… அதனை மீறிப் போர் மூண்டால்போரினால் ஏற்படும் பொருளாதாரஅரசியல் நெருக்கடியைப் பயன்படுத்திமக்களைக் கிளர்ந்தெழச்செய்துமுதலாளித்துவ வர்க்க ஆட்சியை ஒழிப்பது அவர்தம் கடமை…"    
     1907ம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற தேர்தலில் சமூக மக்களாட்சிக் கட்சி 32 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளையும், 42 நாடாளுமன்ற இருக்கைகளையும் வென்றெடுத்துஇரண்டாவது பெரிய கட்சியாக ஓங்கியதுஆதலால் அது சர்வதேய சமூகவுடைமைவாதத்தைத் துறந்துதேசியவாதத்தைப் பற்றிக்கொண்டதுஅதன் பயனாக 1912ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அது 110 இருக்கைகளுடன் முதலாவது பெரும் கட்சியாக மாறியதுஇவ்வாறு (ரசிய போல்சிவிக் கட்சியைத் தவிர ஏனையஐரோப்பிய சமூகவுடைமவாதக் கட்சிகள் அனைத்தும் தத்தம் நாடுகளின் போர் நடவடிக்கைகளை ஆதரிக்கலாயின.
     போருக்கும்சமூக மக்களாட்சிக் கட்சிக்கும் எதிராக வெகுண்டெழுந்த ரோசாமக்களைக் கிளர்ந்தெழும்படி பேசியும்எழுதியும் புரிந்த குற்றத்துக்காக 1915ல் அவருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1916ல் அவர் விடுதலையான பிறகு நிகழ்ந்த மே தினக் கொண்டாட்டத்தை ஒட்டிஅவரும் தோழர்களும் நடத்திய பேரணியில் 10,000 பேர் கலந்துகொண்டார்கள். "அரசு வீழ்கபோர் ஒழிக!" என்று அவர்கள் அறைகூவினார்கள்ஆதலால் ரோசா மீண்டும் சிறைவைக்கப்பட்டார்.
     படையினரின் கிழிந்தகுருதி தோய்ந்த சீருடைகள் வண்டி வண்டியாக அவருடைய சிறைச்சாலைக்கு வந்த வண்ணம் இருந்தனபெண்-கைதிகள் அவற்றைப் பொருத்துவார்கள்அப்பொழுது மிகுந்த சுமையுடன் ஒரு வண்டி வந்ததுஅதனைச் செலுத்திவந்த படையாள்அவ்விரு எருமைகளுக்கும் விளாசி அடித்ததில்அவற்றின் வன்தோல் கிழிந்துகுருதி பாய்ந்ததுரோசா அதனை ஒரு சக கைதியிடம் தெரிவித்தார். "உனக்கு உயிர்கள்மீது இரக்கம் இல்லையா?" என்று அவனிடம் கேட்டபொழுது, "மனிதர்களாகிய எங்கள்மீது எவருக்காவது உள்ள இரக்கத்தைவிட அதிக இரக்கம்எனக்கு இந்த எருமைகள்மீது  இல்லை என்பது உண்மைதான்!" என்று பதிலிறுத்த படையாள்ஒரு கெட்ட முறுவலிப்புடன் மேலும் விளாசி அடித்தான்.  "அப்பொழுது போரின் பயங்கரம் முழுவதும் என் கண்முன் தோன்றியதுஎன்று எழுதிச் சென்றுள்ளார் ரோசா.       
     1914 முதல் 1918 வரை இடம்பெற்ற முதலாம் உலகப் போரில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டதுஜேர்மன் பேரரசர் நாட்டைவிட்டுத் தப்பியோடினார்நாடு முழுவதும் தொழிலாளர் மன்றங்களும்படையினர் மன்றங்களும் முளைவிட்டனபுரட்சியை ஆதரிப்பதாதமது கட்சியை ஆதரிப்பதா என்று தெரியாமல் தொழிலாளர்கள் திண்டாடினார்கள்கலவரமடைந்த அரசாங்கம்ஆட்சியதிகாரத்தை சமூக மக்களாட்சிக் கட்சியிடம் ஒப்படைத்தது.
     என்ன விதப்பட்டும் புரட்சியைத் தவிர்க்கவே சமூக மக்களாட்சிக் கட்சித் தலைவர்கள் விரும்பினார்கள்ஒரு புரட்சிக்கு இடம் கொடுத்தால்அதே புரட்சியால் தாங்கள் வாரிச்செல்லப்படுவோம் என்பதை நன்கறிந்தவர்கள் அவர்கள்ஆதலால் அவர்களுடைய கட்டளைப்படி தொழிலாளர் - படையினர் மன்றத் தலவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்ஆர்ப்பாட்டம் செய்தோர் படையாட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்எந்த  சமூக மக்களாட்சிக் கட்சியில் ரோசா அங்கத்துவம் வகித்தாரோஅந்தக் கட்சியின் அரசாங்கமே அவரைக் கொல்வதற்கு உத்தரவு பிறப்பித்ததுரோசாவின் கொலஞர்களை அம்பலப்படுத்திய குற்றத்துக்காகலியோவும் கையோடு கொல்லப்பட்டான்கொலைஞர்களுள் ஒருவன் தப்பிச்செல்ல அனுமதிக்கப்பட்டான்.  மற்றவன் ஈராண்டுச் சிறைவாசத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டான்
      சிவப்பு ரோசாவும் இனி இல்லையே
     அவர் புதையுண்ட இடமும் புலப்படவில்லையே
Wendy Forrest, Rosa Luxemburg, Hamish Hamilton, London, 1989;  Alfred Cobban, The Nation State and Self-Determination, Collins, London,1969,  மணி வேலுப்பிள்ளை, 2010-05-01.

No comments:

Post a Comment